search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் - சிவசேனா கட்சி வலியுறுத்தல்

    நாகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர தலைவர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் அணி மாநில செயலாளர் சிங்கார வடிவேலன், மண்டல தலைவர் வின்சென்ட், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    நாகை மாவட்டத்தில் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிமாநில மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×