என் மலர்
செய்திகள்

தற்கொலை
திருக்குவளை அருகே கொத்தனார் தற்கொலை
திருக்குவளை அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
திருக்குவளை அருகே சித்தாய்மூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கோபு (வயது32). கொத்தனார். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கோபு, நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கோபு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






