என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் கொரோனாவிற்கு முதியவர் பலி- மேலும் 4 பேருக்கு தொற்று
Byமாலை மலர்7 Jan 2021 11:18 AM GMT (Updated: 7 Jan 2021 11:18 AM GMT)
அரியலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலும், வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,644 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,563 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 343 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 379 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X