என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நிலக்கடலை பயிர் சேதம்
நிலக்கடலை பயிர் 300 ஏக்கர் அழுகி சேதம்- அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
By
மாலை மலர்7 Jan 2021 10:21 AM GMT (Updated: 7 Jan 2021 10:21 AM GMT)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கடைமடைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான விவசாயிகள் போதுமான தண்ணீர் இன்றி நெல் சாகுபடியை கைவிட்டு பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை விரும்பி செய்து வந்தனர். மேலும் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக மகசூலைத் தரும். இதனால் அனைத்து விவசாயிகளும் மார்கழி பட்டம்தான் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.
அதேசமயம் இந்த ஆண்டு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நிவர் மற்றும் புரவி புயலை தொடர்ந்து கடைமடையில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு சில நாட்கள் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி மார்கழி பட்டம் கைவிட்டுப் போகும் என்ற நோக்கில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தொடங்கினர். ஆனால் அதற்கு பின்னரும் மழை பெய்ய தொடங்கியதால் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை பயிர் முளைப்பதற்கு முன் மரக்கா வலசை, கொடிவயல், ஊமத்தநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை விதை அழுகிவிட்டது. இதனால் நிலக்கடலை விவசாயிகள் அனைவரும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி அரசு நிவாரணம் வழங்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான விவசாயிகள் போதுமான தண்ணீர் இன்றி நெல் சாகுபடியை கைவிட்டு பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை விரும்பி செய்து வந்தனர். மேலும் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக மகசூலைத் தரும். இதனால் அனைத்து விவசாயிகளும் மார்கழி பட்டம்தான் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.
அதேசமயம் இந்த ஆண்டு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நிவர் மற்றும் புரவி புயலை தொடர்ந்து கடைமடையில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு சில நாட்கள் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி மார்கழி பட்டம் கைவிட்டுப் போகும் என்ற நோக்கில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தொடங்கினர். ஆனால் அதற்கு பின்னரும் மழை பெய்ய தொடங்கியதால் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை பயிர் முளைப்பதற்கு முன் மரக்கா வலசை, கொடிவயல், ஊமத்தநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை விதை அழுகிவிட்டது. இதனால் நிலக்கடலை விவசாயிகள் அனைவரும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி அரசு நிவாரணம் வழங்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
