search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கல் அய்யனார் கோவில் குளம் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜெகவீரபாண்டியன் (வயது43), ஆழியூர் பிரிவு சாலை அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராமச்சந்திரன் (33) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×