என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பெரணமல்லூர் அருகே டிராக்டர் மோதி சவர தொழிலாளி பலி

    பெரணமல்லூர் அருகே டிராக்டர் மோதி சவர தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த மோட்சவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். சவரத்தொழிலாளியான இவர், கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி சலூன்கடையை திறக்க காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

    கன்னிகோவில் பகுதி அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு டிராக்டர் திடீரென அவரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக சிவா உயிரிழந்தார் விபத்து குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×