search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X
    நெடுவாசலில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    நெடுவாசலில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - 69 பேர் மீது வழக்கு

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வடகாடு:

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஆலங்குடி இணைச்செயலாளர் கோபி தலைமை தாங்கினார். இதில், மாநில உழவர் பாசறை செயலாளர் சிவராமன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் துருவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார். இதில் அக்கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய கோபி உள்பட 69 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×