search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.4¼ கோடிக்கு மது விற்பனை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது.
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 218 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.3¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோலாகலமாக கொண்டாடினர். 

    புத்தாண்டை நேற்று முன்தினம் மதுபிரியர்களும் சிறப்பாக கொண்டாடினர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. அதாவது நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.4 கோடிேய 26 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×