என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது
கீரனூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூர் அடுத்த மண்டையூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் பொருட்கள் வாங்க வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் ேபரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






