என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப்நந்தூரி
    X
    திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப்நந்தூரி

    செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் - கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலையில் செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2020-2021-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும் மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

    கல்லூரி பயிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில்புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று, கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், சுயதொழில் புரிபவராக இருந்தால் சுயதொழில் புரிவதற்கான சான்று மற்றும் மார்புஅளவு புகைப்படம் 2 போன்ற ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×