என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்
Byமாலை மலர்31 Dec 2020 2:44 PM GMT (Updated: 31 Dec 2020 2:44 PM GMT)
அரியாங்குப்பத்தில் ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம்:
அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் ராஜசேகர் (வயது 28). கூலித் தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ் தனது மனைவியுடன் திருவண்ணாமலை சென்றுவிட்டார். ராஜசேகர் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். அப்போது தனது பாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் எடுத்து வருவதற்குள் ராஜசேகர் திடீரென மயக்கமடைந்து கீழே சாய்ந்து விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X