search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கலசபாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    கலசபாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் அருகே உள்ள ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சபீர் வெங்காய வியாபாரி. இவருக்கு திருமணமாகி மரின் (வயது 16) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சபீரின் மனைவி இறந்து விட்டனர். இதனால் அவளது மகள் தந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மரின் திடீரென வீட்டில் இருந்த டீசலை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த மரினை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

    அவரது சாவில் மர்மம் உள்ளதாக கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் உறவினர் ஒருவர் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×