என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.
    X
    கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

    கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கோத்தகிரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலா மையமாக அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யேனார் அம்மனோர் கோவில் ஆகியவை உள்ளது.

    இந்த பூங்கா உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு இடமாக மட்டுமல்லாமல் வெளிமாவட்ட மக்களின் சிறந்த சுற்றலா மையமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

    கொரோனா காரணமாக கடந்த 9-ந் தேதிதான் இந்த பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் கோத்தகிரியில் கடும் குளிர் நிலவுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் தற்போது இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவின் அழகை பார்த்து ரசித்ததுடன், சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அதுபோன்று கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங் வுட் சோலை உள்பட பல சுற்றுலா மையங்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
    Next Story
    ×