என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 479 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 44 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 143 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 292 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், மீதமுள்ள 8 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×