என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீழ்வேளூா் பகுதியில் சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூா் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கூத்தூர் சுடுகாடு அருகில் சாராயம் விற்ற பட்டமங்கலம் வடிவேல் மகன் பாலமுருகன் (வயது20), கீழகாவாலக்குடி கருவை தோப்பில் சாராயம் விற்ற மோகனூரை சேர்ந்த முத்துவேல் (40) , கோவில் கடம்பனூர் மெயின்ரோட்டில் சாராயம் விற்ற செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கணேசன் (40), ஓர்குடி சுடுகாடு அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக் (30) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×