என் மலர்
செய்திகள்

முககவசம்
முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 16 இடங்களில் முககவசம் அணியாமல் நடமாடிய 210 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினர்.
Next Story