search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

    கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23), கிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-யை பறித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×