search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வாய்மேடு அருகே கடையின் ஷட்டரை உடைத்து ரூ.40 ஆயிரம் போன்கள்-பணம் திருட்டு

    வாய்மேடு அருகே கடையின் ஷட்டரை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்-பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனா்.
    வாய்மேடு:

    வாய்ட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மருதூர் வடக்கு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வீரராகவன் (வயது25) என்பவா் போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்போன் கடையின்ஷட்டா் உடைக்கப்பட்டு முன்பக்க கண்ணாடி கதவும் திறந்து கிடந்துள்ளது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினா், இதுகுறித்து வீரராகவனுக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அவா் கடைக்கு வந்து பாா்த்த போது ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானரி, வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் செல்போன்கள்- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் நாகையில் இருந்து மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு அது திருட்டு நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் ஜெயசீலன் தடயங்களை கேகாித்தார். இதுகுறித்து வாய்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனா்.
    Next Story
    ×