என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளில்லா குட்டி விமானம் மூலம் காட்டுயானையை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய காட்சி
    X
    ஆளில்லா குட்டி விமானம் மூலம் காட்டுயானையை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய காட்சி

    தந்தை-மகனை கொன்ற மாயாவி யானையை பிடிக்க வனத்துறையினர் புது வியூகம்

    பந்தலூர் அருகே தந்தை-மகனை கொன்ற மாயாவி யானையை பிடிக்க புதுவியூகம் வகுத்து தேடி வருகின்றனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசுதேயிலைதோட்டம் பகுதியை சேர்ந்த கூடலூர்ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்ஆனந்தராஜ் (வயது49), அவருடையமகன் பிரசாந்த் (21) ஆகியோரை கடந்த 13-ந்தேதிகாட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் அந்தகாட்டு யானையை பிடிக்க தோட்டதொழிலாளர்கள், அனைத்துகட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மயக்க ஊசியுடன் அந்த யானை அங்கிருந்து தப்பி மாயமானது.. இந்த நிலையில் தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அந்த யானை மாயாவி போல் வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் மறைந்து கொண்டு தப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. கூடலூர் உதவிவனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் சின்னதம்பி, மனோகரன், கணேசன் மற்றும்வனத்துறையினரும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டனர். ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலமும் தேடினர். பொது மக்களிடமும் தகவல் சேகரித்தனர். இருப்பினும் அந்த யானை வனத்துறையினர் கண்ணில்சிக்க வில்லை. இந்த நிலையில் அந்த யானை கேரளாவிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் கோட்டமலை கண்ணம்பள்ளி உள்பட யானை சென்று வரும் வழிதடங்களில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை டாக்டர்கள் மனோகரன், ராஜேஷ்குமார், சுகுமார் பிரகாஷ் ஆகியோரும் யானையை தேடி தேடிவருகின்றனர். இதேபோல் சேரம்பாடிவனத்துறையினர்மலப்புரம்மாவட்டம் நிலம்பூர் உயர்அதிகாரிகளை சந்தித்து யானை குறித்துவிசாரணை நடத்தினர். அப்போது இந்த யானை கடந்த நவம்பர் மாதம் கும்பல பாறை ஆற்றுப்பகுதியில் முகாமிட்டது தெரியவந்தது. இதுபந்தலூர் அருகில் உள்ளதால் தொடர்ந்து பந்தலூர் வந்து தாக்கி செல்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மாயாவிபோல் சுற்றிவரும் இந்த யானை சங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது யானை கேரளாவில் இருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதால், அதனை பிடிக்க புது வியூகம் அமைக்கப்பட்டுள்ளது என்றனர். இதற்கிடையே கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர் தீ்ன் மற்றும் வனத்துறையினர், யானைதாக்கி உயிரிழந்த தந்தை, மகன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    Next Story
    ×