search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேப்பூர் அருகே மரத்தில் கார் மோதல் - முதியவர் பலி

    வேப்பூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் அருகே உள்ள இச்சிகாமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 75). சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×