என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு- வாலிபர் கைது

    அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி லட்சுமி அம்மாள் (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வந்த ஒருவர், குடிக்க தண்ணீர் கேட்டார். அப்போது லட்சுமி அம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார். 

    இதுகுறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தேடி வந்தனர்.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் நான்கு வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் படி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விளாத்திகுளம் புதூரை சேர்ந்த அருணகிரிநாதன் (32) என்பதும், லட்சுமியம்மாளிடம் இருந்து நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 பவுன் செயினை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×