என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் போலீசார், வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பெக்கிலி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா (வயது 37), சங்கரப்பா(45), ராமமூர்த்தி(36), எல்லப்பன்(31), நரசிம்மன்(27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் தேன்கனிக்கோட்டை போலீசார், பென்னாங்கூர் அருகில் உள்ள ஒரு கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கோகுல்நகர் அண்ணாதுரை(45), சின்னபென்னாங்கூர் பெருமாள்(43), ஆசாத் தெரு நூருல்லா(54) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×