என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஓசூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
ஓசூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அஸ்வந்த் (வயது 18). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் காதல் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட அஸ்வந்த், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






