என் மலர்
செய்திகள்

கடல்
வேதாரண்யம் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியது
வேதாரண்யம் பகுதியில் திடீரென கடல் 50 அடி தூரம் திடீரென உள்வாங்கியது. இதனால் இயற்கை சீற்றம் ஏதுவும் ஏற்பட போகிறதா? என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் வரை உள்ள கடற்கரை பகுதியில் புரவி புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதால்அதிகளவில் கடல்நீர் புகுந்து, கடல் நீரும் மழை நீரையும் சேர்ந்து குளம் போல் காட்சியளித்தது. கடற்கரையில் உள்ள மீனவர்களின் இறங்கு தள கொட்டகைகள், வலைகள் மற்றும் என்ஜின்களை பாதுகாப்பாக வைக்கும் கொட்டகைகளில் கடல்நீா் சூழ்ந்தது. அதன் பிறகு கடல் நீர் வடிந்து விட்டது. இந்த நிலையில் புஷ்பவனம் பகுதியில் கடல் 50 அடி தூரம் திடீரென உள்வாங்கியது. இதனால் இயற்கை சீற்றம் ஏதுவும் ஏற்பட போகிறதா? என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், இது வழக்கமான நிகழ்வு தான் என்றும், அமாவாசை பவுர்ணமி காலங்களில் காலை முதல் இரவு வரை கடல் உள்வாங்குவதும். பின்னா். பழைய நிலைக்கு கடல் வந்துவிடுவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும், இதற்கு அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் தெரிவித்தனர்.
Next Story






