என் மலர்
செய்திகள்

மின்தடை
சூளகிரி பகுதியில் 15-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
சூளகிரி பகுதியில் 15-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூளகிரி சுற்று வட்டார மின் பாதைகளில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே 15-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சின்னார், சென்னேப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, பருவீதி, அஞ்சாளம், பீர்ப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, சிம்பல்திராடி, காளிங்காவரம், பத்தலப்பள்ளி, சூளகிரி டவுன், காமராஜ் நகர், பேரிகை சாலை, அரசு ஆஸ்பத்திரி, மில்லத் நகர், கீழ்பேட்டை, போகிபுரம், சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






