என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 392 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 57 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 278 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று வெளியான உமிழ் நீர் பரிசோதனை முடிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து என்.எல்.சி. பகுதிக்கு வந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 7 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். மேலும் 544 பேருடைய உமிழ் நீர் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது.
Next Story






