search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    கூடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கூடலூர் அருகே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    கூடலூர்:

    மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக பல நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துயில் மேகம், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் காஞ்சனா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, பாசறை மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் மின்சார மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×