என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பலாத்காரம் - வாலிபருக்கு வலைவீச்சு
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மஞ்சளகிரி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பா என்பவரது மகன் லாளியப்பா (வயது 23) என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது அந்த மாணவியின் உடல் சோர்வை கண்டு அச்சமடைந்த தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் தாய் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு சங்கீதா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி லாளியப்பாவை தேடி வருகின்றனர்.
Next Story






