என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரங்கள் வாங்குவதற்கு விவசாயிகள் ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும்- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்11 Dec 2020 10:13 AM GMT (Updated: 11 Dec 2020 10:13 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ராபி பருவ பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகையை பதிவு செய்து விற்பனைப் பட்டியல் பெற்று தாங்கள் சாகுபடி செய்யும் நிறத்திற்கு ஏற்றவாறு தேவையான உரங்களை மட்டுமே வாங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் போது கட்டாயமாக ஆதார் அட்டையுடன் கைரேகை பதிவு செய்துதான் உரம் விற்பனை செய்ய வேண்டும்.
ஒரு நபருக்கு அதிக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபரின் பெயரில் உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய ஆவணத்துடன் வாகனங்களை அனுப்ப வேண்டும்.
உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உரங்களை இருப்பு வைத்துக்கொள்ள கூடாது. வேளாண் துறையின் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்ய கூடாது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X