என் மலர்
செய்திகள்

கொள்ளை
பொறையாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பொறையாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
நாகை மாவட்டம் பொறையாறு அருகே கழனிவாசல் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள், பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததையும், அங்கு இருந்த உண்டியல் மாயமானதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உண்டியலை தேடியபோது கடலாழி ஆற்றங்கரை புதரில் உடைந்த நிலையில் கிடந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிவிட்டு ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






