என் மலர்
செய்திகள்

தேன்மொழி
ஸ்ரீமுஷ்ணத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
ஸ்ரீமுஷ்ணத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 36). இவருடைய மனைவி தேன்மொழி(36). இவர்களுக்கு ஹாசினி(8) என்ற மகளும், ஹர்ஷிக்(3½) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தூங்கி எழுந்த தேன்மொழி, வீட்டில் இருந்து வெளியே வந்து மின்விளக்கை போடுவதற்காக சுவிட்ச் போர்டில் கை வைத்ததாக தெரிகிறது.
அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே எழுந்து வந்த மணிகண்டன், தேன்மொழி பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த தேன்மொழியின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீட்டில் இருந்த சுவிட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததும், அதில் கை வைத்ததால் தான் தேன்மொழி மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






