என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய ஆணை வழங்கிய மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய ஆணை வழங்கிய மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

    இதில், மேற்கு மாவட்ட பொருளாளர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் தியாகு, மன்னர்மன்னன், சிவா, சமூக ஊடக மைய மாநில துணை செயலாளர் அம்பேத்கர், மகளிர் அணி ஜெயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் திராவிட ராசா, அசோகன், குபேந்திரன், துரைவளவன், தொகுதி செயலாளர்கள் பிரபாகரன், துரைகுட்டி, முரளி, ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அருண், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×