என் மலர்
செய்திகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இச்சிமரம் பகுதியில் சரிந்து விழும் நிலையில் காணப்படும் பாறை
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் சரிந்து விழும் அபாயம்: வாகன ஓட்டிகள் பீதி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.
குன்னூர்:
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் கல்லார் முதல் காட்டேரி வரை 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் குறுகிய வளைவுகளும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது.
தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேற்கண்ட சாலையோரத்தில் ஆங்காங்கே லேசான மண்சரிவு தொடங்கி இருக்கிறது. இதனால் பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மண்சரிவு தொடங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால், சாலையோர மண் இறுக்கம் குறைந்து வருகிறது. இதனால் பாறைகள் உருண்டு விழும் நிலை காணப்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் கல்லார் முதல் காட்டேரி வரை 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் குறுகிய வளைவுகளும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது.
தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேற்கண்ட சாலையோரத்தில் ஆங்காங்கே லேசான மண்சரிவு தொடங்கி இருக்கிறது. இதனால் பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மண்சரிவு தொடங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால், சாலையோர மண் இறுக்கம் குறைந்து வருகிறது. இதனால் பாறைகள் உருண்டு விழும் நிலை காணப்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story






