என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ரத்னா
    X
    கலெக்டர் ரத்னா

    சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் கார்டாக மாற்ற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை இணையதள முகவரி மூலம் அனுப்பலாம் என்று கலெக்டர் ரத்னா கூறியுள்ளார்.
    அரியலூர்:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் தற்போது 465 குடும்ப அட்டைகள் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து வருகிற 20-ந்தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் சமர்ப்பிக்கலாம். 

    எனவே அரியலூர் மாவட்டத்தில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை இணையதள முகவரி மூலம் அனுப்பலாம். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். 

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×