search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுக்கோட்டை அருகே நடந்து சென்றவரிடம் தங்கச்சங்கிலி பறித்தவர் கைது

    புதுக்கோட்டை அருகே நடந்து சென்றவரிடம் தங்கச்சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது38) . இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி சாலையில் நடந்து சென்றார். அப்போது 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். உடனே சுதாரித்த பாண்டியன், சங்கிலியை இறுகப்பிடித்துக்கொண்டார். அப்போது சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோட முயற்சித்தனர். இதில் ஒருவரை பாண்டியன் விரட்டிச்சென்று பிடித்து பொதுமக்கள் உதவியுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் வல்லாத்திராக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது (40) என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அடப்பனவயலை சேர்ந்த ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×