என் மலர்
செய்திகள்

கண்காணிப்பு கேமரா
குற்ற சம்பவங்களை தடுக்க 2,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நீலகிரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 2,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலைகள் உள்ளன. தமிழக மற்றும் மாவட்ட எல்லையில் நாடுகாணி, கக்கநல்லா, எருமாடு, பர்லியார், குஞ்சப்பனை, பாட்டவயல், முள்ளி உள்பட 16 சோதனைச்சாவடிகள் உள்ளன. எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார், வனத்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் வாகன திருட்டு உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தலா ஒரு அதிநவீன தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தானாகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண் புகைப்படத்துடன் பதிவு செய்யப்படுகிறது. சந்தேகப்படும்படியான நபர் குற்ற செயலில் ஈடுபட்டு தப்பினால், வாகன பதிவு எண்ணை கொண்டும், பதிவு காட்சிகளை வைத்தும் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பர்லியார், நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் தலா 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் ஒன்று அதி நவீன தானியங்கி கேமரா ஆகும். சாலை பாதுகாப்பு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு நிதியின் மூலம் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஜார்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 500 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் மற்ற இடங்களில் கேமராக்கள் கண்காணிப்பு தேவையா? என்று கண்டறிந்து கூடுதலாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மலை மாவட்டமான நீலகிரியில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலைகள் உள்ளன. தமிழக மற்றும் மாவட்ட எல்லையில் நாடுகாணி, கக்கநல்லா, எருமாடு, பர்லியார், குஞ்சப்பனை, பாட்டவயல், முள்ளி உள்பட 16 சோதனைச்சாவடிகள் உள்ளன. எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார், வனத்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் வாகன திருட்டு உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தலா ஒரு அதிநவீன தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தானாகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண் புகைப்படத்துடன் பதிவு செய்யப்படுகிறது. சந்தேகப்படும்படியான நபர் குற்ற செயலில் ஈடுபட்டு தப்பினால், வாகன பதிவு எண்ணை கொண்டும், பதிவு காட்சிகளை வைத்தும் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பர்லியார், நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் தலா 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் ஒன்று அதி நவீன தானியங்கி கேமரா ஆகும். சாலை பாதுகாப்பு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு நிதியின் மூலம் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஜார்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 500 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் மற்ற இடங்களில் கேமராக்கள் கண்காணிப்பு தேவையா? என்று கண்டறிந்து கூடுதலாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Next Story






