search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரி மாவட்டத்தில் 113 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரியில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. நவம்பர் மாத இறுதியில் தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 20-ஐ கடந்தது. கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து 14 நாட்கள் வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களும் குறைந்து உள்ளன. தற்போது 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×