search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.

    அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் நேற்று சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 954 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று பாதித்த 413 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×