என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி- நாயும் இறந்த சோகம்
Byமாலை மலர்3 Dec 2020 6:38 AM GMT (Updated: 3 Dec 2020 6:38 AM GMT)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பூமா தேவி (வயது 60).
இன்று அதிகாலை இவர் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது.
அப்போது ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை அவர் தெரியாமல் மிதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதேபோல் அவருடன் சென்ற வளர்ப்பு நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. லேசான காற்றும் அடித்தது. இதில் மின் வயர் அறுந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது.
அடுத்தடுத்து பெண் மற்றும் நாய் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பூமா தேவி (வயது 60).
இன்று அதிகாலை இவர் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது.
அப்போது ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை அவர் தெரியாமல் மிதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதேபோல் அவருடன் சென்ற வளர்ப்பு நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. லேசான காற்றும் அடித்தது. இதில் மின் வயர் அறுந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது.
அடுத்தடுத்து பெண் மற்றும் நாய் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X