search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் லட்சுமி தனியாக வசித்து வந்தார். லட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், தனக்கு யாருமே உதவிக்கு இல்லையே என்று மனவேதனையிலும் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் லட்சுமி விஷம் குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் லட்சுமி இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×