என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொய்கை சந்தை அருகே வாகனம் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்2 Dec 2020 10:36 AM GMT (Updated: 2 Dec 2020 10:36 AM GMT)
பொய்கை சந்தை அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை சந்தை அருகே பெங்களுரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 65 வயது முதியவர் ஒருவர் நேற்று காலை 6.30 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் வெள்ளை மற்றும் நீல கலரில் சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதியவர் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X