என் மலர்
செய்திகள்

தற்கொலை
மனைவி இறந்ததால் மனவேதனை- விஷம் குடித்து விவசாயி தற்கொலை
வேதாரண்யம் அருகே மனைவி இறந்த கவலையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது50).விவசாயி. இவருடைய மனைவி மாரிமுத்து. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். மனைவி மாரிமுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராதா தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு தினமும் உறவினரின் மகள் ஒருவர் வந்து சமையல் செய்து வைத்து விட்டு சென்று விடுவார்.
மனைவி இறந்ததாலும், தன்னை பாதுகாக்க யாரும் இல்லையே என மனவேதனை அடைந்த ராதா சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் காரியப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






