என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோட்டோரம் தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயம் - கடத்தலா? போலீஸ் விசாரணை
Byமாலை மலர்1 Dec 2020 9:51 AM GMT (Updated: 1 Dec 2020 9:51 AM GMT)
கோபியில் ரோட்டோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமானது. குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்:
கோபி பஸ் நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள பாலத்தில் ஏராளமான ஊசி, பாசி மணி விற்கும் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பகலில் ஊசி, பாசி மணி விற்றுவிட்டு இரவில் பாலத்தில் குடும்பத்துடன் படுத்து தூங்குவார்கள். அவர்களில் ஒருவர் அம்மாசை (வயது 28), இவருடைய மனைவி திலகா (26). இவர்களுக்கு தில்லி (2) உள்பட 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அம்மாசையின் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். தில்லியும் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்தான்.
இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அம்மாசையும், திலகாவும் கண் விழித்து பார்த்துள்ளனர். அப்போது தில்லியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இதுகுறித்து கோபி போலீசில் திலகா, குழந்தையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தில்லி கடத்தப்பட்டானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
கோபி பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X