என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

    வேலூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வேலூர், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது காட்பாடி தாலுகா பெரிய மோட்டூர் கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த திருமலை (வயது 60) மற்றும் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மதுவிற்ற கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×