search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூரில் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த பெண் கைது

    கடலூரில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் நேற்று சுரங்கப்பாதை அருகில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சுப்புராயலுநகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயலட்சுமி (வயது 38) சுரங்கப்பாதையில் தவறான வழியில் வந்தார். 

    இதை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் அவரிடம் இது பற்றி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, சக்திவேலை ஆபாசமாக திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. 

    இது பற்றி சக்திவேல் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
    Next Story
    ×