என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது
Byமாலை மலர்30 Nov 2020 9:22 AM GMT (Updated: 30 Nov 2020 9:22 AM GMT)
வேதாரண்யம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி சேது சாலையில் வசிப்பவர் கவியரசன். இவர் வேதாரண்யத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருக்கும், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (எ) சுரேஷ்குமார் (வயது 36) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கவியரசன் ஊரில் இல்லாத பொழுது சுரேஷ்குமார், கவியரசன் வீட்டிற்கு கத்தியுடன் சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது அந்த வழியே வந்த கவியரசனின் நண்பர் புஷ்கரணி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (30) என்பவர் இதை பார்த்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் கிஷோரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
இதேபோல சுரேஷ்குமாரின் தாயார் ஜெயராணி வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் கவியரசன் நண்பர்களான புஷ்கரணியைச் சேர்ந்த கிஷோர், அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த காமராஜ், அகிலன், ராஜ்குமார் ஆகிய 4 பேரும் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு வந்து அவரை தரக்குறைவாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரித்துள்ளார். அதன்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X