search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூர் அருகே போலி டாக்டர் கைது

    ஓசூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கோனப் நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 36). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் மருந்து கடை நடத்தி வந்தார். அதன் பின்புறம் கிளினிக் தொடங்கி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பூபதி மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் நேற்று மருந்து கடை மற்றும் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது மக்களுக்கு பிரசாத் மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. இது குறித்து அவர்கள் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் பிரசாத்தை கைது செய்தனர். தொடர்ந்து கிளினிக் மற்றும் மருந்து கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    Next Story
    ×