என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தனப்பள்ளி அருகே கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
Byமாலை மலர்28 Nov 2020 7:49 AM GMT (Updated: 28 Nov 2020 7:49 AM GMT)
கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சகிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மனைவி சத்யா என்ற சசிகலா (வயது 27). கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் நாகேந்திரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவின் 2 குழந்தைகளும் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சத்யா, தனது தாயுடன் தட்டக்கல் கிராமத்தில் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 குழந்தைகள் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த சத்யா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X