search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் கொனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

    இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 

    இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது தொற்று உள்ள 332 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×