என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
Byமாலை மலர்23 Nov 2020 4:33 AM GMT (Updated: 23 Nov 2020 4:33 AM GMT)
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், பீமனூர் அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்த ரூ.12,720-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் என 9 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டணம் பாபு(வயது 42), ராஜா(23), மகேந்திரமங்கலம் சக்கரவர்த்தி(44), கட்டிகாரன்கொட்டாய் மணிகண்டன்(21), ஜிட்டாண்டஅள்ளி சின்னராஜ்(47), தேவர்முக்குளம் பாண்டுரங்கன்(59), அருள்மணி (45), பாப்பாரப்பட்டி மணிகண்டன்(36) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல், மத்தூர் போலீசார், சின்னஅள்ளேரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கல்குவாரி அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(40), ஜமால்பாஷா(50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X